நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது என்றும் நம் விரலை வைத்து நம் கண்ணை குத்தி விடுவார்கள் என்றும் பேசி இருந்தார். மேலும் தான் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசிய நிலையில் விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

இதற்கு பல அரசியல் தலைவர்கள் வரவேற்பும் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் ராசியில் குறித்து பேசிய குமரி எம்பி விஜய்வசந்த், ‘காங். – திமுக கூட்டணியில் விஜயை இணைக்க தயாராக உள்ளோம். ஆனால், தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்