தமிழகத்தில் கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் மின் நுகர்வோருக்கு கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது 3 ஆயிரம் மற்றும் நான்காயிரம் மின் கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டடமாக பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதற்கு நுகர்வோர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது, கூடுதல் மின் நுகர்வுக்கான டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.