தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என எண்ணும் பெண்கள் காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 004-23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம்.

காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். பெண்கள் அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இது இலவச சேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.