சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த எஸ் பி. சிங் பாகேல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கெலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியது, நீதிபதிகளின் நியமனத்தில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரஜிஜூபுவியியல் துறைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் இணை அமைச்சரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.இதையடுத்து, புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.