இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவரை ஓடும் காரில் நான்கு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 இளைஞர்கள் சிறுமியை ஒரு வாகனத்திற்குள் வலுகட்டாயமாக அழைத்துச் சென்று தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஓடும் காரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.