கர்நாடக மாநிலம் மங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துர்காபரமேஸ்வரி கோவில் அருகில் சென்ற அந்த சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கரும்புகையுடன் பற்றி எரிந்த பேருந்தின் தீயை போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பேருந்து  எரிந்து நாசமானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.