திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இலவச டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்துக்காக சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் விஐபி தரிசனம் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானமானது அறிவித்துள்ளது.