நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தேர்தல் கமிஷன் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்த முடிவு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே எடுக்கப்பட்ட தாகவும் புதிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசின் வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.