டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2025 ஆம் ஆண்டு பருவத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் இந்த தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு விண்ணப்ப படிவங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர் சென்னை 600003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு  www.rimc.gov.in  என்ற இணையதள முகவரியை அணுகவும்.