சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம். இவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் நிறைவடைந்த பிறகு எம்பி கார்த்தி சிதம்பரம் தன்னுடைய காரில் கும்பகோணம் கிளம்பி சென்ற நிலையில் கிருஷ்ணராயபுரம் அருகே திடீரென விபத்தில் சிக்கியுள்ளார். அதாவது கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து வந்த கார் ஒரு மினி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் கார் பின்னோக்கி சென்று திடீரென கார்த்தி சிதம்பரத்தின் காரிலும் மோதியது. மேலும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.