டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உடனான உலகக் கோப்பை போட்டியை விளையாட சென்னை வந்த அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய உடலில் தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.