மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் நவம்பர் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் அக்., 13ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.,20, மனுக்கள் மீதான பரிசீலனை அக்., 21ல் நடைபெறும், வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் நவ., 23, டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.