அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. அக்கடிதம் புழல் சிறை அதிகாரிகளிடம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் புறப்பட்டார். இதன் காரணமாக சென்னை அண்ணா சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.