தமிழகத்தில் காய்கறிகள் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சின்ன வெங்காயம் நேற்று கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி பதினைந்து ரூபாய் உயர்ந்து மொத்த விற்பனையில் 25 ரூபாய்க்கும் சில்லறையில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனைப் போலவே கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விளையும் அதிகரித்துள்ளதால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.