தமிழக அரசின் 15 ஆயிரம் அரசு பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தீபாவளிக்குள் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐந்தாயிரம் இடங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் கட் ஆப் மதிப்பெண் அதிகமாக இருக்கும். குரூப் 4 பணியிடங்களுக்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்போதே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுங்கள்.