சென்னை உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை வரும் குடியரசுத் தலைவர் கிண்டி ராஜ்பவனில் இன்று இரவு தங்க உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தற்போது பாதுகாப்பு பணியில் சுமார் 5,000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.