10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் நகல் பெற மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு எழுதியவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களைவிட மாணவிகள் 5.95 % அதிகம் தேர்வாகியுள்ளனர். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக விண்ணப்பித்து தங்கள் விடைத்தாள் நகலைக் கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.