தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு மையத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் ₹275 கட்டணம் வசூலிக்கப்படும்.