தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கும் அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதால் நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும் நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள நாள் என்பதால் அன்றும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.