காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு திரட்ட நேற்று சென்னையில் பாஜக நிர்வாகிகளை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடக்கும் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழாவில் பங்கேற்க குஜராத் புறப்பட்டு உள்ளார். பயணத்தின் இடையே பாஜக தலைவர்களை ஓபிஎஸ் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பொங்கல் விழாவில் பங்கேற்க செல்வதாகவும் அரசியல் காரணங்களால் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் இவர் திடீரென குஜராத் புறப்பட்டு இருப்பது அதிமுகவில் இபிஎஸ் தரப்பினர் இடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.