காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார் என்று புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி தங்களுக்கு ஆதரவு அளிக்காதது இபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் ஆதரவு கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு தரப்பினரும் நேற்று அண்ணாமலையை சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.