தமிழகத்தில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அரசுடன் மக்களும் இணைய வேண்டும் எனவும் முடிந்தவரை அனைவரும் நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு நிதி உதவி கொடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார். அதன் பிறகு திட்டத்தை தொடங்கி வைக்கும் போது முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பங்களிப்பாக 5 லட்ச ரூபாய் காண காசோலையை வழங்கினார். இதேபோன்று திமுக எம்எல்ஏக்களும் நம்ம ஸ்கூல் திட்டத்திற்காக 1.29 கோடி நிதி வழங்கியுள்ளனர். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு கொடுத்தனர்.

அந்த வகையில் தற்போது திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத் தொகையான 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளனர். இந்த காசோலையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினார். இதேபோன்று எம்எல்ஏ ஆர்.எஸ் ஈஸ்வரன், மனிதநேய கட்சியின் தலைவரும் எம்எல்ஏவும் ஆன எம்.எச். ஜிவாஹிருல்லா, எம்எல்ஏ அப்துல் சமது, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, எம். பூமிநாதன், சதன் திருமலை குமார், ஏ ஆர்ஆர் ரகுமான், ஆகியோரும் வழங்கினார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகேபி சின்ன ராஜாவும் ஒரு லட்ச ரூபாய் காண காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.