அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் பங்கேற்று உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் கூடும் முதல் கூட்டம் என்பதால், இதில் கலந்துகொள்ளும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து பலத்தை அறியலாம். அதன்படி EPS-க்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.