மக்களவைத் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.