நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு விவசாயிகளுக்கு முதலீட்டு உதவி வழங்கும் பிரதமர் கிஷான் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இந்த தொகையை 50% வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.