இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.9ஆம் தேதி திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.