சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக்காட்சியில் ஜன.8ம் தேதி காலை 9 மணிக்கு முதல்முறையாக “சென்னை வாசிக்கிறது” என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த வாசிப்பு நிகழ்ச்சியில்பங்கேற்கலாம் என பபாசி அறிவித்துள்ளது.