பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்புடன் ₹1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், பொங்கல் பணம் ₹1000, பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாள் & நேரத்தில் ரேஷன் கடையில் பரிசுத் தொகுப்பை பெறலாம் எனவும் கூட்டுறவுத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது