திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளம், மீட்பு பணி, நிவாரணப் பணிகளால், திமுக இளைஞரணி மாநாடு 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.