உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த கே.வி விஸ்வநாதன் இன்று பதவி ஏற்க உள்ளார்.வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவர் பொள்ளாச்சியை சேர்த்தவர். கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை படித்த இவர் 2009 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.