தமிழகத்தில் இல்லம் தேடி திருக்கோவில் பிரசாதம் வழங்கும் திட்டம் மற்றும் திருக்கோவில் செயலி ஆகியவற்றை அமைச்சர் சேகபாபு தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தகவல் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்திக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள திருக்கோவில் என்ற கைபேசி செயலியையும்,48 முதுநிலை திருக்கோவில்களில் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு மத்திய அரசு அஞ்சல் துறையுடன் இணைந்து அனுப்பி வைக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ளவர்கள் திருக்கோவில்கள் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்கு உரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூல் செய்யப்படும். எந்தெந்த திருக்கோவில்களில் எந்தெந்த பிரசாதங்கள் சிறப்போ அவை அனுப்பி வைக்கப்படும். அடுத்த கட்டமாக மூன்று மாத காலத்திற்குள் உலகம் முழுவதும் திருக்கோவில் பிரசாதங்களை அனுப்பி வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.