நீட் தோல்வியால் மாணவரும், விரக்தியில் அவரது தந்தையும் தற்கொலை செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தையின் மரணம் நீட் பலி பீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அவர், மாணவர்கள் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும் என உறுதியளித்துள்ளார்.