சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் இறுதிச் சடங்கை முடித்துவிட்ட தந்தை செல்வசேகர் துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் பல உயிர்கள் போன பின்னும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறது மத்திய அரசு.