சிம்லாவில் கனமழையை தொடர்ந்து நிலச்சரிவில் 15 கட்டடங்கள் புதைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோர் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர் மழை பெய்து வருவதால், இடிபாடுகளை அகற்றும் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.