ED தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை தரப்பிற்கும் மனு குறித்த தகவலை தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் ஜூன்14ல் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியிடம் ED விசாரணை நடத்திய நிலையில், திடீர் திருப்பமாக மனு தாக்கல் செய்துள்ளார்.