சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி நடைபெற இருந்த விருந்தை, CM ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. இந்நிலையில், மழை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது