மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடுகாரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவுநேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்றும், தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.