நேற்று நடந்த ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரியில் சரியாக ஏற்பாடு செய்யவில்லை. இதனால், டிக்கெட் வாங்கியும் பலர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை; பாதுகாப்பு வசதிகளும் மோசமாக இருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், ஏ.ஆர் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம், நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என அறிவித்துள்ளது.