திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் தமிழ் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழக மற்றும் ஆந்திர இடையே பயணத்தடை ஏற்பட்டுள்ளது.