மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் வரை வழங்குவதற்கு அரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இந்த திட்டத்தின் படி ஒன்பதாம் வகுப்புக்கு வருபவர்கள் மரம் நட வேண்டும். இந்த மரத்தை 12 ஆம் வகுப்பு வரை பாதுகாக்க வேண்டும் என இந்த திட்டம் கூறுகின்றது. இந்தப் பணியை சரியாக முடிக்கும் மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் அருவித்துள்ளார்.