சுதந்திர தினத்தன்று அனைவரது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இந்த வருடம் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதனால் இந்தியா முழுவதும் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்கள் மூலமாக தேசிய கொடிகள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று 25 ரூபாய் கொடுத்து தேசியக்கொடிகளை வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.