இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனமான ஐ ஆர் சி டி சி பாலிக்கு சம்மர் டூர் பேக்கேஜை வழங்குகின்றது. வருகின்ற ஆகஸ்ட் 11 முதல் தொடங்கி 5 இரவுகள் மற்றும் ஆறு பகல்கள் அடங்கிய பயணத்தை வழங்குகின்றது. இந்த சுற்றுலாவிற்கு கட்டணமாக ரூ.1,05,900 செலுத்த வேண்டும். இதில் Ubud village, tanah lot temple tour, கடற்கரைகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் இந்த பேக்கேஜில் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் உணவு மற்றும் பானங்கள் முதல் தங்குமிடம் வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தரப்படும். அதுமட்டுமல்லாமல் இன்சூரன்ஸ் வசதியும் இதில் பெற முடியும். ஒரு நபருக்கு டபுள் மற்றும் ட்ரிபிள் occupancy கட்டணம் 1,05,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் occupancy கட்டணமாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுடன் ஒருவர் பயணம் செய்ய விரும்பினால் கூடுதல் படுக்கைக்கு ஒரு லட்சத்து 600 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். இரண்டு முதல் பதினோரு வயது வரையிலான குழந்தைகளுக்கு twin bed பெற விரும்பினால் 94 ஆயிரத்து 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஐ ஆர் சி டி சி அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஐ ஆர் சி டி சி  Tourist Facilitation Center, மண்டல அலுவலகங்கள் அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கு சென்றும் இந்த டூருக்கு முன்பதிவு செய்யலாம்.