வரும் துர்கா பூஜையை முன்னிட்டு ஐஆர்சிடிசி ஸ்பெஷல் டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. துர்கா பூஜையை வட மாநிலங்களில் கொண்டாட விரும்புவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. டார்ஜீலிங் மற்றும் டோர்ஸ் ஆகிய இடங்களுக்கு இரண்டு சிறப்பு பயணங்களை மேற்கொள்ள ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த இரண்டு பயணங்களும் அக்டோபர் 21ஆம் தேதி சப்தமி அன்று சீடல் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு ஏசி 3 டையர் பெட்டிகளில் டிக்கெட் வழங்கப்படும்.

டார்ஜீலிங் பயணத்திற்கு ஒரு நபருக்கு 21,100 கட்டணம் என்றும், டோர்ஸ் பயணத்திற்கு 18,850 கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் டிக்கெட் உணவு, தங்குமிடம் உட்பட அனைத்து செலவுகளும் அடங்கும். சுற்றுலா பயணிகள் டீலக்ஸ் ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள். சுற்றி பார்ப்பதற்கு கார்கள் வழங்கப்படும். பயணிகளுக்கு சிறப்பு பெங்காலி தாலி உணவுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.