1996-2021 வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான இடத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, பொன்முடியை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்