தமிழகத்தில் புதிதாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை செயலர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றியிருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சித் துறையின் இயக்குநராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வந்துள்ள இந்த அறிவிப்பால் மற்ற அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.