தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரொக்கம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

கடந்த வருடம் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாததால் இதனை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.