மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டை தடை விதிக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டனர்; ஆனால் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு ஏற்க முடியும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மதுரை மாநாட்டில் வெடிபொருட்களோ, பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என அதிமுக தரப்பு உறுதியளித்துள்ளது.