கேரள ஆளும் அரசுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வரையே இயக்கப்படுவதால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேசமயம், ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டும் கேரள எல்லைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.