அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 1 மணி முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எழுத்துத் தேர்வு, திறன் திறவு. நேர்காணல் ஆகியவற்றின் அடைப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே பணி நியமனம் நடைபெறும். புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.