அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தள்ளுபடி செய்யுமாறு ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கு எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு வழக்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பினால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.